தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

விவாதம்: பெருசு Vs. இளசு

with one comment

Senior Vs. Junior
நன்றி: பிஸினஸ்லைன்

மணிரத்னத்தின் “ஆயுத எழுத்து”, லிங்குசாமியின் “ஜி”, ஷங்கரின் “முதல்வன்” என படங்களை வரிசைப்படுத்தினால் எல்லோரும் முன்வைக்கும் ஒரு வாதம் அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என்பது முன்வைக்கப்பட்டிருக்கிறது. டாடா டீயின் ”ஜாகோ ரே” தளத்திற்கான விளம்பரத்திலும் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி வேண்டும் என்பதும், ஐடியா செல்லுலாரின் விளம்பரங்கள் (அபிஷேக் பச்சன்) அரசியல் ரீதியான தீர்வுகளை எப்படி மக்களிடம் கேட்டு எடுக்க வேண்டும் என்பதை முன்வைத்தும் சொல்லப்பட்டிருக்கும்.

ஜனநாயக நாடுகளில், மிக இளமையான மக்கள் தொகை (18-45) கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் எல்லோருமே 60 வயதினை தாண்டியவர்களாக (ராஜீவ் காந்தி நீங்கலாக) இருக்கிறார்கள். ஒரு இளமையான தேசத்திற்கு முதுமையான தலைவர்கள் என்னவிதமான செய்திகளையும், நம்பிகைகளையும் விதைக்க முடியும்? இன்றைக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை இளைஞர்களுமே அவரவர் தந்தை, சொந்த கட்சி சார்பாக இருப்பவர்களேயொழிய, நிஜமான நடுத்தர வர்க மக்களின், இளைஞர்களின் இன்றைய தேவைகளை புரிந்து கொள்ளூம் ஒரு பிரதிநிதி இன்று வரை வரவில்லை.

Innovative Radical Reforms Organisation என்ற அரசியல்-சாரா அமைப்பின் தலைவர், வழக்கறிஞர் பிரபாத் குமார் இன்றைய பிஸினஸ்லைனில் மிக முக்கியமான இந்த விஷயத்தினை தொட்டிருக்கிறார். இளைஞர்கள் எப்படி அரசியலை பார்க்கிறார்கள் (”அது சாக்கடை”, “நாம இருந்தமா, நம்ம வேலைய பார்த்தமா சம்பாதிச்சமா” “இறங்கிடணும், அப்பதான் ஒரு 35-40ல வாரிய செயலாளர் போஸ்டிங் வாங்கிடலாம்”) Vs. பெரியவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது ஒரு மிக முக்கியமாக விவாதிக்க பட வேண்டிய விஷயம்.

கீழே வரும்   கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

  1. ஏன் ஒரு சராசரி இந்திய இளைஞனுக்கு அரசியல் பார்வையில்லை ?
  2. இந்திய அரசியலில் பெண்களை எப்படி பார்க்கிறது? பெண்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள் ?
  3. அரசியல் ரீதியான முடிவுகளை, இன்றைய இளைஞர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் அல்லது அவர்களுக்கு அரசியலே புரியவில்லையா?

One Response

Subscribe to comments with RSS.

  1. The Indian State does not protect the “Individual”. The Indian Individual exists and excels “despite” The Indian State. Hence, societal thought shud come about above and beyond the Individual’s practical concerns, needs etc. May be that’s why the indifference of the Indian Youth towards an evolved political thought.

    Mahesh Ramamani

    February 6, 2009 at 4:30 PM


Leave a comment