தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Posts Tagged ‘வயது

பைரோன் சிங் ஷிகாவத் – பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)

leave a comment »

அத்வானி தான் பா.ஜ.கவின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்து, கூகிள் ஆட்வேர்ஸில் வேறு விளம்பரன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், என்.டி.ஏ காலத்து துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷிகாவத், முஷ்டியினை மடித்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங் மற்றும் இன்ன பிற தேர்தலையே சந்திக்காத நபர்கள் எல்லாம் கட்சியில் முன்னிலைப்டுத்த படுவதும், அத்வானி/வாஜ்பாயினை விட சீனியரான தன்னை யாரும் கண்டுகொள்ளாததும் இந்த முறைப்புக்கு காரணமாக இருக்கிறது.

ஏற்கனவே பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத பட்சத்தில் [ஸ்திரத்தன்மை, நாட்டின் பாதுகாப்பு] இப்போது பைரோன் சிங் ஷிகாவத் பேசி கொண்டிருக்கும், மாற்று பிரதம மந்திரி பேச்சு இன்னமும் பா.ஜ.க தொண்டர்களை பிளவுப் படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிண்ணணியில் தான் இது நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், பழமைவாத பாஜக தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இது அல்வா சாப்பிடுவது போன்ற தருணம்.

என்னத்தான், ராமர் கோயில் கட்டுவோம் என்று சவடால் விட்டாலும், அது கட்ட முடியாது என்பது பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தெளிவாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தெரிந்துவிட்டது. இப்போது மீண்டும் அந்த சவடாலை ஆரம்பிக்கும்போது அதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

பாஜகவின் உள்கட்சி பூசல் பூதாகாரமாய் வெடித்தால், பெற போகும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளிலும் பாஜக பெரும் எதிர்ப்பையும் தோல்வியையும் சந்திக்குமென்று தோன்றுகிறது.

கேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா?

பார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸில் பங்கஜ் வோராவின் பத்தி.

விவாதம்: பெருசு Vs. இளசு

with one comment

Senior Vs. Junior
நன்றி: பிஸினஸ்லைன்

மணிரத்னத்தின் “ஆயுத எழுத்து”, லிங்குசாமியின் “ஜி”, ஷங்கரின் “முதல்வன்” என படங்களை வரிசைப்படுத்தினால் எல்லோரும் முன்வைக்கும் ஒரு வாதம் அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என்பது முன்வைக்கப்பட்டிருக்கிறது. டாடா டீயின் ”ஜாகோ ரே” தளத்திற்கான விளம்பரத்திலும் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி வேண்டும் என்பதும், ஐடியா செல்லுலாரின் விளம்பரங்கள் (அபிஷேக் பச்சன்) அரசியல் ரீதியான தீர்வுகளை எப்படி மக்களிடம் கேட்டு எடுக்க வேண்டும் என்பதை முன்வைத்தும் சொல்லப்பட்டிருக்கும்.

ஜனநாயக நாடுகளில், மிக இளமையான மக்கள் தொகை (18-45) கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் எல்லோருமே 60 வயதினை தாண்டியவர்களாக (ராஜீவ் காந்தி நீங்கலாக) இருக்கிறார்கள். ஒரு இளமையான தேசத்திற்கு முதுமையான தலைவர்கள் என்னவிதமான செய்திகளையும், நம்பிகைகளையும் விதைக்க முடியும்? இன்றைக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை இளைஞர்களுமே அவரவர் தந்தை, சொந்த கட்சி சார்பாக இருப்பவர்களேயொழிய, நிஜமான நடுத்தர வர்க மக்களின், இளைஞர்களின் இன்றைய தேவைகளை புரிந்து கொள்ளூம் ஒரு பிரதிநிதி இன்று வரை வரவில்லை.

Innovative Radical Reforms Organisation என்ற அரசியல்-சாரா அமைப்பின் தலைவர், வழக்கறிஞர் பிரபாத் குமார் இன்றைய பிஸினஸ்லைனில் மிக முக்கியமான இந்த விஷயத்தினை தொட்டிருக்கிறார். இளைஞர்கள் எப்படி அரசியலை பார்க்கிறார்கள் (”அது சாக்கடை”, “நாம இருந்தமா, நம்ம வேலைய பார்த்தமா சம்பாதிச்சமா” “இறங்கிடணும், அப்பதான் ஒரு 35-40ல வாரிய செயலாளர் போஸ்டிங் வாங்கிடலாம்”) Vs. பெரியவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது ஒரு மிக முக்கியமாக விவாதிக்க பட வேண்டிய விஷயம்.

கீழே வரும்   கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

  1. ஏன் ஒரு சராசரி இந்திய இளைஞனுக்கு அரசியல் பார்வையில்லை ?
  2. இந்திய அரசியலில் பெண்களை எப்படி பார்க்கிறது? பெண்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள் ?
  3. அரசியல் ரீதியான முடிவுகளை, இன்றைய இளைஞர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் அல்லது அவர்களுக்கு அரசியலே புரியவில்லையா?
Follow

Get every new post delivered to your Inbox.