தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Posts Tagged ‘தினமலர்

இன்னுமொரு சாதிக்கட்சி உதயமானது.

with one comment

நேற்றைய தினமலர் செய்தி:

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=873

கோவையில் நடந்த கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாட்டில், கொங்குநாடு முன்னேற்ற பேரவை என்ற கட்சி முறைப்படி துவக்கப்பட்டது; பச்சை மற்றும் மஞ்சள், சிவப்பு நிற கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.கொங்கு வேளாள கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாடு, கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியில் கோலாகலமாக துவங்கியது. பின், தீரன் சின்னமலை கடவுளாக அறிவிக்கப்பட்டு, கண் திறக்கும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், பரமத்தி, வேலூர், சங்ககிரி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் கொங்கு இன மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல, வலுவான அமைப்பு தேவை என்ற கோஷத்துடன் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, தன்னுடைய அரசியல் பிரவேசத்தை ஆரம் பித்துள்ளது.பேரவையின் முதல் அரசியல் எழுச்சி மாநாடு, கருமத்தம் பட்டியில் அதிகாலை யாக பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது.

——————————————–

தமிழர் என்று இனத்தால் ஒன்று பட வேண்டிய நேரத்தில் நம்மக்கள் சாதிப் பெயரில் கட்சி / அரசியல் நடத்துவது வேதனையானது.

Follow

Get every new post delivered to your Inbox.